அண்ணாமலையை காப்பாற்ற ஆட்டு தாடி ரம்மி ரவி ஆளுநர் தமிழ்நாட்டை, தமிழகம் என பேசி திசை திருப்பி வருகிறார் திமுக தலைமை கழக பேச்சாளர் சுந்தரவள்ளி கடுமையாக சாடியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையத்தில் திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மயிலாடுதுறை எம்.பி இராமலிங்கம், பூம்புகார்,சீர்காழி எம்.எல்.ஏக்கள் நிவேதா முருகன்,பன்னீர்செல்வம் உள்ளிட்ட திமுக வினர் திரெளானோர் கலந்து கொண்டனர்
இதில் கலந்துகொண்ட திமுக தலைமை கழக பேச்சாளர் சுந்தரவள்ளி பேசியதாவது : தமிழ்நாட்டில் பாஜக எவ்வளவு பேசினாலும் எடுபடாது தூக்கி வீசப்படும் ,ஆட்டுக்குட்டி அண்ணாமலை தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகள் சிக்கி வருவதால் அவரைக் காப்பாற்ற ஆட்டு தாடி ரவியான தமிழக ஆளுநர் ரம்மி ரவி தமிழ்நாட்டை தமிழகம் என பெயரை அழைக்கலாம் எனத் தெரிவித்தார்.
ஆட்டுக்குட்டி அண்ணாமலையின் பிரச்சினையை திசை திருப்பி வருகிறார்,ரம்மியால் பல்வேறு குடும்பங்கள் தற்கொலை செய்து கொண்டு வருவதால் தமிழக முதல்வர் ரம்மியை தடை செய் கோரி சட்டம் இயற்ற கோரி மனு அனுப்பியதை ஆளுநர் ரவி அந்த மனு தூக்கி போட்டு அலட்சிய படுத்தி வருவதாக குற்றம்சாட்டினார்.
மேலும் தமிழ்நாடு என்ற பெயர் வெறும் பெயர் அல்ல நம் நாட்டிற்கு விடுதலைக்கு போர்க்கு கிடைத்த பெயர் தான் தமிழ்நாடு என்றார் . மேலும் சீமான் தானே பேசி தானே சிரித்து கொண்டு வருவதால் பைத்தியக்காரன் என கடுமையாக சாடினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…