Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இரவு நேரத்தில் தண்ணீர் திறக்க வேண்டா,... முதல்வர் உத்தரவு..!

Muthu Kumar August 04, 2022 & 16:30 [IST]
இரவு நேரத்தில் தண்ணீர் திறக்க வேண்டா,... முதல்வர் உத்தரவு..!Representative Image.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

கேரளா, கர்நாடகா மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துள்ள நிலையில், தமிழக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் காவிரி ஆறு செல்லும் 12 மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

இந்நிலையில், இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர், “தமிழகத்தில் கனமழை காரணமாக அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், முன்னறிவிப்பின்றி தண்ணீரை வெளியேற்றுவதோ, வெளியேற்றும் அளவை அதிகரிப்பதோ வேண்டாம். இரவு நேரங்களில் தண்ணீர் வெளியேற்றுவதை அதிகரிக்கக்கூடாது” என தெரிவித்துள்ளார். 

மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்படும் கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான முகாம்களில் தங்கவைக்கப்பட வேண்டும். முகாம்களில் தங்கும் மக்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் மற்றும் நிவாரண உதவிகள் உடனுக்குடன் வழங்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்