மத்திய தகவல் மின்னணு மற்றும் தகவல் தொழிநுட்ப அமைச்சகம் ஆதார் கார்ட் குறித்த தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் உங்கள் ஆதரிக்கார்டை எந்தவித தனியார் கணினி நிலையங்களில் பதிவிறக்கம் செய்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. மேலும் உங்கள் ஆதார் கார்டை அதே போல் கணினி நிலையங்களில் நகல் (ஜெராக்ஸ்) எடுக்காதீர்கள் என தெரிவித்துள்ளது. காரணம் உங்கள் ஆதார் விவரங்களை திருட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.
மேலும் அவசியம் ஏற்படும்போது உங்கள் ஆதார் கார்டில் கடைசி நான்கு எங்களை மட்டும் காட்டும் மாஸ்க்டு ஆதாரை மட்டும் காட்டுங்கள் என அறிவுறுத்தியுள்ளது. ஏனெனில் உங்கள் ஆதார் என்னை வைத்து சட்டவிரோத செயலில் கூட அவர்கள் ஈடுபடலாம் என எச்சரித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…