இலங்கையில் கடந்த சில நாட்களாக பொருளாதார தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் பெரும் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளிநாடு தப்பிச் சென்று விட்டார். அதையடுத்து இப்போது ரனில் விக்ரமசிங்கே இடைக்கால அதிபராக பதவியேற்றுள்ளார்.
இதனையடுத்து, இலங்கையில் இன்றும் நிலைமை கட்டுக்குள் வரவில்லை. இதனால் இலங்கையில் விலைவாசி உயர்வு கடுமையாக உள்ளது. அதன்படி, பெட்ரோல், டீசல், அரிசி உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்களின் விலை உச்சத்தில் உள்ளது.
அதன்படி, இலங்கையின் சூப்பர் மார்க்கெட்டில் ஆப்பிள் ஒரு கிலோ 2050 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், இது தொடர்பாண புகைப்படங்கள் இணையத்தில் வைரலகி வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…