தூத்துக்குடி மாவட்டம் கீழஈரால் அரசு பொது மருத்துவமனையில் வேலை பார்க்கும் மருத்துவர் ஆனந்த் மற்றும் அவரின் மனைவி மருத்துவர் வனிதா தம்பதியினர். தங்களது 5 வயது குழந்தையுடன் தர்ணாவில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மருத்துவர் வனிதா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தனது கணவர் மருத்துவர் ஆனந்தும் தானும் கீழ ஈரால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வருகிறோம். கடந்த ஐந்து வருடங்களாக பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகிறோம் என கூறியுள்ளார்.
மேலும் தன்னை சாதி ரீதியாக அசிங்கமாக பேசி துன்புறுத்தி வருகின்றனர்., மேலும் நான் பெண் என்பதால் என்னிடம் எதையும் வெளிக்காட்ட முடியாததால் எனது கணவரை கடுமையான துன்புறுத்தலுக்கு கோவில்பட்டி மருத்துவத்துறை துணை இயக்குனர் போஸ்கோ ராஜா, மற்றும் கண்காணிப்பாளர் ராஜா இருவரும் சேர்ந்து தொந்தரவுக்கு உள்ளாக்கி வருகின்றனர். எனது கணவரின் முகத்தில் பேப்பரை வீசி எறிந்து இரண்டு பேரையும் ‘வெளியே போ’ என சொல்லி அனுப்பி விட்டனர்.
மேலும் வனிதாவின் கணவர் மருத்துவர் ஆனந்த் கூறுகையில் நான் கடந்த 2017ல் இருந்து தூத்துக்குடி மாவட்டம் கீழஈரால் அரசு பொது மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறேன். கண்காணிப்பாளர் ராஜா தூண்டுதலின்பேரில் கோவில்பட்டி மருத்துவத்துறை துணை இயக்குனர் போஸ்கோ ராஜா எனக்கு தேவையில்லாத மெமோ கொடுத்து வருகிறார். இதுகுறித்து சென்னையை சேர்ந்த எங்களது இயக்குனர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு பல முறை புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்துளோம் என கூறியுள்ளார்.
மனு கொடுக்க வந்தவர்கள் அங்கு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு உள்ள பணியில் உள்ள காவலர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மனு கொடுக்க ஏற்பாடு செய்தவுடன் தர்ணா போறதை கைவிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…