Minister of Railways : தமிழ்நாட்டில் பணிபுரியும் ரயில்வே ஊழியர்களுக்கு தமிழ் தெரிந்திருக்க வேண்டும் என ரயில்வே துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் பணிபுரியும் வட மாநிலத்தவர்களில் தமிழ் தெரியாதவர்கள் தமிழை கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
புகார்
தமிழகத்தில் பணிபுரியும் பல ரயில்வே ஊழியர்களுக்கு தமிழ் தெரியாததால் பயணிகள் கடும் அவதியில் உள்ளதாக பல ஆண்டுகளாக பயணிகள் புகாரளித்து வருகின்றனர்.
நடவடிக்கை
இந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த ரயில்வே துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்னவ், தமிழகத்தில் உள்ள ரயில்வே பணியாளர்கள் தமிழை கற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். ரயில்வே துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்னவ் வெளியிட்ட இந்த அறிவிப்பு ரயில்வே ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…