போபால்: எதிர்கட்சிகள் அறிவிக்கும் இலவசங்களை நம்ப வேண்டாம் என பிரதமர் மோடி பொதுமக்களிடம் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசம் மாநிலம் ஷாதோல் மாவட்டத்தில் புதிய சுகாதார திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் காங்கிரஸ் உள்ளிட்ட வாரிசு அரசியலை மையமாக கொண்ட கட்சிகள் மக்களை கவர்வதற்கு போலி வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர். இலவச மின்சாரம், கட்டணமில்லா பேருந்து வசதி உள்ளிட்டவை ஏமாற்று வேலை.
தொழில்துறை மற்றும் வணிகத்தை பாழாக்கும் வகையில் எதிர்கட்சிகள் இலவசங்களை அளித்து வருவதாக குற்றச்சாட்டிய அவர், ஊழல் வழக்கில் பிணை பெற்றவர்கள், முறைகேடு குற்றச்சாட்டில் சிறை சென்றவர்கள் எல்லாம் பாட்னாவில் கை கோர்த்தனர் என பாட்னாவில் நடைபெற்ற எதிர்கட்சிகளின் கூட்டத்தை விமர்சனம் செய்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…