கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மர்ம மரணம் விவகாரத்தில் கலவரத்தில் ஈடுபட்ட 300 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் செயல்பட்டு வரும் சக்தி மெட்ரிக் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவி பள்ளி கட்டிடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மாணவி மரணத்தில் மர்மம் இருப்பதால் அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனையடுத்து, நேற்று நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது.
இந்த கலவரத்தில் பள்ளிக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பள்ளி பேருந்துகள், போலீஸ் வாகனம் உள்ளிட்டவற்றை தீ வைத்து கொளுத்தினர். மேலும், பள்ளி அலுவலகத்தில் புகுந்து சூறையாடியதில் பல மாணவர்களின் சான்றிதழ்களும் எரிந்தது.
மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவலர்கள் வீடியோ மூலம் கலவரத்தில் ஈடுபட்ட 300 பேரை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் போராட்டம் நடைபெற்ற சக்தி மெட்ரிக் பள்ளியை முழுவதும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த போலீஸார் பள்ளிக்கு காவலை அதிகப்படுத்தியுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…