க்யூ நெட் நிறுவனத்தின் தங்க காசு மோசடி விவகாரத்தில் போலி கம்பெனிகள் மூலம் 2000 கோடி ரூபாய் வரை மோசடி நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது
இந்த மோசடி தொடர்பாக 90 கோடி ரூபாய்க்கு மேல் பணம் உள்ள 36 வங்கி கணக்குகளை முடக்கியுள்ளதாக நேற்று அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது. கடந்த இரண்டு நாட்களாக சென்னை மும்பை பெங்களூர் ஆகிய பகுதிகளில் மோசடிக்கு தொடர்புடைய ஐந்து இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது
.
மும்பை பொருளாதார குற்றப்பிரிவு 400 கோடி ரூபாய் மோசடி விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதை அடிப்படையாக வைத்து அமலாக்கத்துறை இந்த சோதனையை மேற்கொண்டதில் பல்வேறு டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…