Pakistan Latest News : பாகிஸ்தான் எல்லையில் பதுங்க்கியுள்ள பயங்கரவாதிகள் இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறார்கள். இந்நிலையில், கடந்த சில நாட்களாக பாகிஸ்தானின் டிரோன்கள் இந்திய எல்லையில் பறந்து போதை பொருள், வெடிபொருள் உள்ளிட்டவற்றை வீசி வருகின்றன. இதனால், எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் டிரோன்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை 4.15 மணியளவில் காஷ்மீரின் சர்வதேச எல்லையில் டிரோன் பறந்தது. இந்த டிரோன் பாகிஸ்தானைச் சேர்ந்ததாக இருக்கலாம் என சந்தேகபட்ட எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்.) வீரரகள் துப்பாக்கியால் சுட்டனர். இதனால் அந்த டிரோன் அங்கிருந்து மாயமானது.
மேலும், டிரோன் பறந்த அப்பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ம்ந்ந்லும், அப்பகுதியில் ஆயுதம் அல்லது ஏதாவது வெடிபொருளை விட்டு சென்றுள்ளார்களா என சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும், காஷ்மீர் எல்லையில் டிரோன் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…