சர்வதேச அளவில் பாரா உலக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிகள் பிரான்ஸ் நாட்டில் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் பெண்களுக்கான 10மீ ஏர் ரைபிள் SH1 இல் இந்தியாவின் அவனி லெகாரா 250.6 என்ற உலக சாதனை புள்ளியுடன் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில் இன்று நடைபெறும் பி6 - 10மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரூபினா பிரான்சிஸ் மற்றும் மணீஷ் நர்வால் ஜோடி சீன ஜோடியான யாங் சாவோ மற்றும் மின் லியை வீழ்த்தி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
பாரா உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரூபினா பிரான்சிஸ், மணிஷ் நர்வால் தங்கம் வென்று அசத்தியுள்ளனர். இந்த போட்டிகளில் இந்தியாவின் 3வது தங்க பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…