Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தண்டவாளத்தில் தூங்கிய இளைஞர்கள்....சரக்கு ரயில் ஏறி பலி...!

madhankumar June 13, 2022 & 15:09 [IST]
தண்டவாளத்தில் தூங்கிய இளைஞர்கள்....சரக்கு ரயில் ஏறி பலி...!Representative Image.

தூத்துக்குடியில் மது அருந்திவிட்டு ரயில் தண்டவாளத்தில் இரு இளைஞர்கள் படுத்து துங்கியுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ரயில் அவர்கள் மீது எறியதில் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி பசும்பொன் நகர் என்ற பகுதியை சேர்ந்த  மாரிமுத்து மற்றும் திரு.வி.க நகரைச் சேர்ந்த மாரிமுத்து, நெல்லை மாவட்டம் பணகுடியைச் சேர்ந்த ஜெபசிங் ஆகியோர், தூத்துக்குடி பிஎன்டி காலனியில் நடைபெற்ற நண்பர் திருமணத்திற்கு சென்றுவிட்டு அதிக மதுபோதையில் திரும்பிய இவர்கள் மூன்றாவது மைல் ரயில்வே தண்டவாளத்தில் உறங்கியுள்ளனர்.

அப்போது அதிகாலை 3 மணியளவில் அந்த தண்டவாளத்தில் வந்த சரக்கு ரயில் இவர்கள் மூன்று பேர் மீதும் எறியுள்ளது. இதில் ஜெபசிங் என்பவர் காயங்களுடன் உயிர் தப்பினர். மற்ற இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பின்னர் இது குறித்து தகவலறிந்து வந்த ரயில்வே போலீசார் இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனை அனுப்பிவைத்தனர்.  

இதனையடுத்து காயமடைந்த ஜெபசிங்கிடம் விசாரணை நடத்தியபோது அவர் கூறுகையில், நண்பரின் திருமணத்திற்கு சென்று மது அருந்திவிட்டு வந்தோம் அதிகப்படியான போதையின் காரணமாக தண்டவாளத்தில் படுத்துவிட்டோம். ஆனால் நான் தண்டவாளத்தின் நடுவே படுத்திருந்தேன், ஆனால் அவர்கள் தண்டவாளத்தின் குறுக்கே படுத்திருந்தனர் என கூறியுள்ளார். 

மதுபோதையில் உறங்கியவர்களின் மீது சரக்கு ரயில் ஏறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்