பாஜகவைச் சேர்ந்தவரும் திருப்பூர் மாவட்டத்தில் பஞ்சாயத்து தலைவராக இருப்பவருமான அசோக் குமார் மதுபோதையில் ஹோட்டலில் மயங்கிய நிலையில் இருக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் பஞ்சாயத்தின் தலைவராக இருப்பவர் அசோக்குமார். பாஜவைச் சேர்ந்த இவர் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி பல்லடம் ராயர்பாளையத்தில் மத்தியில் பாஜகவின் எட்டு ஆண்டு ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டம் பல்லாயிரக்கணக்கான மக்களுடன் திராவிட கட்சிகளுக்கு நிகராக மிக பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.
இதில் அசோக்குமார் கலந்து கொண்டதோடு, தான் பஞ்சாயத்து தலைவராக உள்ள மாதப்பூரில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை அழைத்து வந்து அண்ணாமலையால் தூய்மை பணியாளர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வைத்தார். இது அங்கிருந்த அனைவரையும் கவர்ந்தது
இந்நிலையில், கட்சி கூட்டத்தை முடித்துவிட்டு தனக்கு நெருக்கமான தொண்டர்களுடன் பொங்கலூர் அருகே உள்ள தனியார் உணவு விடுதியில் மது அருந்த சென்றுள்ளார். அங்கு அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாகக் கூறப்படும் நிலையில், மது போதையில் அங்கிருந்து நடக்கக்கூட முடியாமல் மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.
இதையடுத்து அவருடன் வந்த கட்சி தொண்டர்கள் நடக்க முடியாத அவரை தூக்கி செல்வது அங்கிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. இது தற்போது வைரலாக சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…