Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆபத்து! ஆபத்து!!... மீனவர்கள் உடனே வீடு திரும்ப அழைப்பு! 

Kanimozhi Updated:
ஆபத்து! ஆபத்து!!... மீனவர்கள் உடனே வீடு திரும்ப அழைப்பு! Representative Image.

புயல் எச்சரிக்கை காரணமாக வாக்கி டாக்கி மூலம் தங்கு கடலுக்கு சென்ற மீனவர்க: உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டுமென மீன்வளத்துறை அதிகாரிகள் வாக்கி டாக்கி முலமாக அறிவுறுத்தி வருகின்றனர். 

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ள காரணத்தினால் மீனவர்கள் மீன்பிடிக்கச் கடலுக்கு செல்ல வேண்டாம் என 4ம் தேதி மீன் வளத்துறை மூலம் அறிவிக்கப்பட்டது. இதனால் நாகை மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் பைபர் படகுகள் மீன்பிடிக்க செல்லமால் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்திவைக்கபட்டுள்ளது.

கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட விசைபடகு மீனவர்கள் அவசர அவசரமாக நேற்று  கரை திரும்பி விட்டனர். கடலில் தங்கி மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற நாகை மாவட்டத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட விசைபடகுகள் கரை திரும்பாத நிலையில் கோடியக்கரை மீன்வளத்துறை கட்டுப்பாட்டு அறையில் இருந்து வாக்கி டாக்கி மூலம் மீனவர்களுக்கு புயல்  உருவாகி இருப்பதால்  கடலில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது ஆகையால் உடனடியாக மீனவர்கள்  கரை திரும்ப வேண்டும் என எச்சரிக்கை தொடர்ந்து விடுக்கப்பட்டு வருகிறது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்