நடப்பாண்டில் மட்டும் மேட்டூர் அணையானது 3-வது முறையாக அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது விவசாய பெருமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சராசரியாக 9 ஆயிரம் கன அடிக்கு மேல் இருந்த நிலையில் மேட்டூர அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை நடப்பாண்டில் 3-வது முறையாக எட்டியது.
கடந்த ஜூலை மாதம் 16ஆம் தேதி மேட்டூர் அணை, அணையின் வரலாற்றில் 42 வது முறையாக நிரம்பியது. மூன்று மாதத்திற்கு பிறகு நடப்பாண்டில் இரண்டாவது முறையாக மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை அக்டோபர் 12-ந்தேதி எட்டியது. இதனிடையே மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்ட நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகரித்து வந்தது.
இந்நிலையில் நடப்பாண்டில் 3-வது முறையாக இன்று இரவு 7.05 மணிக்கு அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. அணை அதன் முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து அணைக்கு வரும் நீர் முழுவதுமாக ( சுமார் 9 ஆயிரம் கன அடி நீர் ) அப்படியே காவிரியில் திறந்து விடப்படுகிறது.
மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை நடப்பாண்டில் 3-வது முறையாக எட்டிருப்பது காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…