Tamilnadu News Live : தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் அதிகாலை காட்சி அனுமதிக்கப்படுவது எந்த விதியின் அடிப்படையில் அனுமதிக்கப்படுகிறது என தமிழக அரசிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அதிகாலை காட்சி
தமிழகத்தில் உள்ள திரை அரங்குகளில் அதிகாலை காட்சி குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விக்னேஷ் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் தமிழ்நாடு திரையரங்குகள் ஒழுங்குமுறை சட்டத்தின் படி அதிகாலை ஒரு மணி முதல் காலை 9 மணி வரை காட்சிகள் திரையிட கூடாது என உள்ளது.
தடை
இந்நிலையில், தமிழகத்தில் பல திரையரங்குகளில் இந்த விதியை மீறி அதற்கு முன்பாக திரையிடப்படுகிறது. மேலும் இது குறித்து விசாரணை நடத்தி சிறப்புக் காட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றம்
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அதிகாலை காட்சிகளை எந்த விதியின் அடிப்படையில் அனுமதிக்கப்படுகிறது என்பது குறித்து தமிழக அரசும் காவல் துறையும் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…