இரண்டு பிளாஸ்டிக் பை நிறைய மண்டை ஓடுகள் சாலையில் கிடந்தது திருப்பூர் மக்களை பயத்தில் உறைய வைத்திருக்கிறது. திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே ஊதியூர், தாராபுரம் சாலையில் இச்சிப்பட்டி கிராமத்தில் காற்றாலைகள் உள்ளன. மக்கள் நடமாட்டம் அதிகளவில் இல்லாத இந்த பகுதியில், நேற்று இரு பிளாஸ்டிக் கவர்களில் மனித மண்டை ஓடுகளும், எலும்புத் துண்டுகளும் நிறைய இருந்தன.
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவற்றை கைப்பற்றினர்.இதை யார் கொண்டு வந்து வீசிச் சென்றுள்ளனர் என எந்த விவரமும் தெரியவில்லை. கொலை போன்ற சம்பவம் நடந்து சடலங்களை மறைக்க கொண்டு வந்து வீசப்பட்டதா அல்லது பில்லி சூனியம் போன்றவற்றில் ஈடுபடும் நபர்கள் பயன்படுத்தியவையா, என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த மாதம் நத்தக்காடையூரில், கீழ் பவானி பாசன வாய்க்காலில் ஒரு மனித எலும்பு கூடு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதே போல் கருக்கபாளையம் பிரிவில், வீட்டுமனைப் பிரிவில் இருந்த மேல் நிலைத்தொட்டியில் மனித எலும்புக்கூடு ஒன்றும், விலங்கு வேட்டைக்கு பயன்படுத்தப்படும் சுருக்கு கம்பிகளும் கிடந்தன, இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்றுவருவதால் மக்களும் போலீசாரும் குழப்பமடைந்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…