India : ஆந்திர மாநிலம் பிரகாசம், பாபட்லா, பல்நாடு ஆகிய 3 மாவட்டங்களில் நேற்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் பொதிலிபட்டிணம், மாதவாரிப் பளையம், கணிகிரி பட்டணம், அனுமந்து பாடு, மர்ரிவாடி மண்டலம், துக்கி ரெட்டிபாளையம், கோண்டா சமுத்திரம் உள்ளிட்ட இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில், இந்த நிலனடுக்கம் ஏற்பட்ட போது வீடுகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பாத்திரங்கள் உருண்டு கீழே விழுந்தது. சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. கட்டில், பீரோ, நாற்காலி, பிரிட்ஜ் உள்ளிட்டவைகள் அதிர்ந்தன. நிலநடுக்கத்தை உணர்ந்த பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியேறி ஓடினர்.
இதையடுத்து, பல் நாடு மாவட்டத்தில் சாவல்ல புரம், பிச்சிகுலுபாளையம் ஆகிய இடங்களில் 2.40 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தா வீட்டு சுவர்கள், மேற்கூரைகளில் விரிசல் விழுந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
இந்நிலையில், வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கிராமங்களுக்குச் சென்று பொதுமக்களிடம் நிலநடுக்கத்தால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது. மேலும், நிலநடுக்கம் குறித்து பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என தெரிவித்தனர்.
ஆந்திர மாநிலத்தில் அடுத்தடுத்து 3 மாவட்டங்களில் நிலநடுக்கம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…