தமிழகத்தில் பிரபல அதிமுக கட்சியுல் ஒற்றை தலைமை என்ற சர்ச்சை எழுந்துள்ள நிலையில், தற்போது இடைகால அதிமுக தலைமையாக எடப்பாடி பழனிசாமி பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அதிமுக கட்சியில் இருந்து எடப்பாடியை நீக்குவதாக அறிவித்துள்ளார். இது போன்று தொடந்து ஓ.பன்னீர்செல்வம் கொடுத்து வரும் குடைச்சலில் இருந்து விடுபட எடப்பாடி பழனிசாமி மோடியின் ஆதரவை நாடியுள்ளார்.
இதனையடுத்து, சுதாரித்துக் கொண்ட மோடி, “முட்டி மோதி ஒரு முடிவுக்கு வாருங்கள். அப்புறம் பார்த்து கொள்ளலாம்” என ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தனி தனி சந்திப்பை தவிர்த்து விட்டார். இது எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், தற்போது திமுக மோடியிடம் நெருக்கத்தை காட்டியது சில சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், களத்தில் இறங்கியாச்சு. இனி துணிந்து தான் ஆக வேண்டும் என்ற நிலையில் எடப்பாடி பழனிசாமி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பாஜக-வை எதிர்க்கும் நிலை வந்தாலும் அதற்க்கு தயாராக இருக்க வேண்டும் என கட்சியின் முக்கிய பிரமுகர்களிடம் அவர் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…