கனமழை காரணமாக தெலங்கானா மாநிலத்தில் பள்ளி கல்லூரிகள் அனைத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஜுலை 17ம் தேதி வரைக்கும் நீடிக்க இருப்பதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
இதற்கிடையில் அந்த மாநிலத்தில் வரும் இரண்டு நாட்களுக்கு கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இப்போது தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால், தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி, கிராமங்களுக்கு இடையேயான சாலை இணைப்புகள் பல இடங்களில் சேதமடைந்துள்ளன. தவிர அடுத்த ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்கு கனமழை பெய்யும் என எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருப்பதால் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து அவசியமானால் மட்டுமே வெளியே செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…