கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் அருகே பல வருடங்களாக பயன்படுத்திவந்த நடைபாதையை சுற்றுச்சுவர் எழுப்பி அடைத்ததால், நோய் வாய்ப்பட்ட வயதான தம்பதி வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் அருகே தேமானுர் பகுதியை சேர்ந்தவர் ரசலையன்(வயது87). அவரது மனைவி சாரதாமணி (வயது83).இருவரும் குடும்பத்துடன் கடந்த 65 ஆண்டுகளாக அதே பகுதியில் 10.5 சென்ட் நிலத்தில் வீடு அமைந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், அவரின் வீட்டில் இருந்து முன்பகுதியில் உள்ள சாலைக்கு செல்லும் வழி பாதையை அனைத்து தேவைக்கும் பயன்படுத்தி வந்த நிலையில், அவரது குடும்பத்தை சேர்ந்த ஸ்டீபன் உட்பட ஏழு பேர் சேர்ந்து திடீரென அந்தப் பாதையை அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக ஏற்கனவே வழக்கு விசாரணை மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில், வழி பாதையை அடைத்ததால் நோய் வாய்ப்பட்ட தம்பதி, வெளியே செல்ல வழியின்றி தவித்து வருகின்றனர். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அனுப்பியும் நடவடிக்கை எடுக்க வில்லை எனக் கூறும் முதியவர் ரசலையன், தங்கள் பிரச்சனைக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…