இந்திய அளவில் பெண் கல்வி 28 சதவீதம் இருக்கும் நிலையில் தமிழகம் 78 சதவீதம் வரை வளர்ச்சி அடைந்து உள்ளது தான் திராவிட மாடல் அரசின் சாதனை. மனோன்மணியம் பல்கலை மாணவர்களுக்கு பட்டத்தை வழங்க ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டபேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
மாவட்ட அளவில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் நோக்கில் தமிழக அரசின் சிற்ப்பு திட்டமான நான் முதல்வன் திட்டம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கான படித்த இளைஞர்கள் பங்கேற்றனர்.
பல தரப்பட்ட நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப இந்த சிறப்பு வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்ற இளைஞர்களிடம் நேரடியாக தேர்வு செய்தனர். இந்த நிகழ்ச்சியை தமிழக சட்டபேரவை தலைவர் அப்பாவு துவங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழ் வளர்த்த மனோன்மணியம் சுந்தரனார் பெயரை தாங்கி நிற்கும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக எல்லைக்கு உட்பட்ட கல்லூரிகளில் 3 ஆண்டுகளாக பட்டம் வழங்கப்படவில்லை. இக்கல்லூரியில் படித்தவர்களுக்கு ஆளுநர் விரைவில் பட்டம் வழங்க வேண்டும்.
இது நியாயமா ? எங்கள் மக்களுக்கு இப்படி செய்கிறீர்களே? படித்த சான்று இல்லாமல் எங்கள் மக்களுக்கு வெளிநாடு போக முடியவில்லை. மேல்படிப்பிற்கு போக முடியவில்லை அதனால குடுங்கய்யா என்று ஆளுநரிடம் கேட்க வேண்டும்.
புதிய கல்விக்கொள்கையால் தமிழகம் 200 ஆண்டுகள் பின் தங்கிவிடும் இந்திய அளவில் பெண் கல்வி 28 சதவீதம் இருக்கும் நிலையில் தமிழகம் 78 சதவீதம் வரை வளர்ச்சி அடைந்து உள்ளது தான் திராவிட மாடல் அரசின் சாதனை.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…