Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

யானை தாக்கி பழங்குடியின முதியவர் உயிரிழப்பு; ஊட்டியில் பரபரப்பு! 

KANIMOZHI Updated:
யானை தாக்கி பழங்குடியின முதியவர் உயிரிழப்பு; ஊட்டியில் பரபரப்பு! Representative Image.

உதகை அருகே வனப்பகுதியில் யானை தாக்கி பழங்குடியின முதியவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

உதகை அருகே உள்ள மாவநல்லா கிராமத்தை சார்ந்தவர்  மாதன் குரும்பர் இன ஆதிவாசியான இவர் தனியார் தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில் நேற்று மாலை வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்க மசினகுடிக்கு  சென்றுள்ளார்.

பின்னர் பொருட்களை வாங்கி மாவனல்லாவிற்கு திரும்பி மாதன் வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிக்கு வந்த ஒற்றை காட்டுயானை மாதனை துரத்தி தாக்கியுள்ளது. மாதனின் அலறல் சத்தம் கேட்டு உடனடியாக அருகில் இருந்தவர்கள் மாதன் சென்ற வழியில் பார்க்கும் பொது யானை தாக்கியதில் மாதன் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார். 

உடனடியாக மாதன் மீட்ட அவர்கள் மசினகுடி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்று அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.  ஆனால் மாதன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து மாதனின் உடல் பிரேத பரிசோதனைகாக உதகை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது.

மாவனல்லா பகுதியில் சுற்றித் திரியும் இந்த ஒற்றை காட்டு யானை ஏற்கனவே இரண்டு பேரை தாக்கி கொன்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்