Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உட்கட்சி மோதல்.. கட்சி பெயரும் சின்னமும் முடக்கம்.. தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!!

Sekar October 09, 2022 & 12:21 [IST]
உட்கட்சி மோதல்.. கட்சி பெயரும் சின்னமும் முடக்கம்.. தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!!Representative Image.

உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆகிய இரு பிரிவினரும் சிவசேனா என்ற கட்சி பெயரையும் அதன் வில் அம்பு தேர்தல் சின்னத்தையும் பயன்படுத்த தடை விதித்து இந்திய தேர்தல் ஆணையம் நேற்று இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.

அதன் இடைக்கால உத்தரவில், அந்தேரி கிழக்கு இடைத்தேர்தலில், உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆகிய இரு பிரிவினரும், சிவசேனாவுக்கு ஒதுக்கப்பட்ட வில் & அம்பு சின்னத்தைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளது.

தற்போதைய இடைத்தேர்தலுக்காக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட பொதுசின்னங்களின் பட்டியலில் இருந்து இரு குழுக்களுக்கும் வெவ்வேறு சின்னங்கள் ஒதுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இரு குழுக்களும் அக்டோபர் 10 ஆம் தேதி மதியம் 1 மணிக்குள் தங்கள் சின்னத்தை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமர்ப்பிக்கப்பட்ட விருப்பங்களிலிருந்து இரு பிரிவினருக்கும் பெயர் மற்றும் சின்னத்தை ஆணையம் ஒதுக்கலாம். அந்தேரி கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் நெருங்கி வருவதால் சின்னத்தை ஒதுக்கக் கோரிய ஷிண்டே அணியின் கோரிக்கையின் பேரில் நேற்று இடைக்கால உத்தரவு வந்தது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்