ஆண்டுதோறும் மின் கட்டணத்தை உயர்த்த அரசு, தமிழக மின்பகிர்மான கழகத்திற்கு அனுமதி வழங்கியுள்ளதாகக் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளுக்குப் பின்னர், மின் கட்டணம் உயர்த்தப்பட்டு, இன்று முதல் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.. அதன் படி, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வசூலிக்கப்படும் மின்சார கட்டணத்திற்கு யூனிட் அளவுகோலைப் பொறுத்து மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 8 ஆண்டுகளுக்குப் பின்னர், உயர்த்தப்பட்ட இந்த மின் கட்டணத்தையே திரும்ப பெறுமாறு வலியுறுத்தப்பட்ட நிலையில், ஆண்டு தோறும் அமல்படுத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த முறை அமல்படுத்தப்பட்ட மின்சார கட்டண உயர்வு பட்டியலில், வணிக மின் நுகர்வோருக்கு மாதந்தோறும் ரூ.50 மின் கட்டணம் உயர்ந்துள்ளது. மேலும், தமிழகத்தில் ஆண்டுதோறும் 6% மின் கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன் படி, ஆண்டு தோறும் ஜூலை 1 ஆம் நாள் மின் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து மக்களிடையே பெரும் அச்சத்தையும், கவலையின்மையும் ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…