Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ரேபிஸ்...பாம்புக்கடி மருந்துகள் ஸ்டாக் வைக்க உத்தரவு..!

madhankumar July 02, 2022 & 13:16 [IST]
ரேபிஸ்...பாம்புக்கடி மருந்துகள் ஸ்டாக் வைக்க உத்தரவு..!Representative Image.

ரேபிஸ், பாம்புக் கடி மருந்துகள் தேவையான அளவு இருப்பு வைக்க வேண்டும் என்று அனைத்து மாவட்டங்களுக்கும் தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் உள்ள சில ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரேபிஸ் (வெறி நாய்க்கடி) பாம்புக்கடி மருந்துகள் இல்லாதது சோதனையின் போது தெரியவந்துள்ளது. இந்நிலையில் இந்த மருந்துகள் அதிகமாக ஸ்டாக் வைத்திருக்க வேண்டும் என சுகாதாரத்துறை  இயக்கனர் செல்வ விநாயகம் அனைத்து மாவட்ட துணை இயக்குனர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பான சுற்றறிக்கையில், தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ரேபிஸ் தடுப்பு மருந்து 20 குப்பிகளும், பாம்பு கடி தடுப்பு மருந்து 10 குப்பிகளும் எப்போதும் இருப்பு இருப்பதை உறுதி செய்யவேண்டும். பொதுமக்களிடம் இது மருந்துகள் இல்லை என்ற புகார் வராத அளவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்