மக்கள் ஏமாளிகளாக இருந்தால், இன்னும் கொஞ்ச நாளில் தாய்ப்பாலுக்கு கூட பாஜகவினர் ஜிஎஸ்டி விதிப்பார்கள் என மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி விதித்துள்ளதாக கூறி மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்தவகையில் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் நம்பியூரில் பேசிய தமிழக காங்கிரஸின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், "பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தான் செல்லும் இடங்களில் எல்லாம் சட்டத்தை மீறும் வகையில் நடக்கிறார். போலீசார் சொல்வதை கேட்பதும் கிடையாது. போலீசார் அறிவுறுத்தியும், அவர் ஈரோட்டில் ஊர்வலமாக சென்றுள்ளார். முன்னாள் காவல்துறை அதிகாரியான அவருக்கு இது அழகா?
பால், நெய், தயிர் மீதும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் ஏமாளிகளாக இருந்தால், இன்னும் கொஞ்ச நாளில், தாய்ப்பாலுக்கு கூட ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். நெசவாளர்களுக்காக பாஜக தலைவர் அண்ணாமலை தெருவில் இறங்கி போராடுவதை விட, அங்கு ஓடும் சாக்கடைகளை சுத்தம் செய்தால் அது மக்களுக்கு நன்மை பயக்கும்." எனக் கூறினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…