உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ராஜேந்திர பகுகுணா (வயது 59). காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான இவர் கடந்த 2004-2005-ம் ஆண்டில் என்.டி.திவாரி தலைமையிலான மந்திரி சபையில் மந்திரியாக பதவி வகித்தவர். இவர் மகன் அஜய் பகுகுணாவுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் இவர் தனது சொந்த பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்துவருவதாக அவரது மருமகள் போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து அவர் மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்திவந்தனர். இதனால் மிகுந்த அவமானம் அடைந்த அவர் தனது வீட்டின் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியின் மீது ஏறி பொலிஸாருக்கு செல்போனில் அழைத்து தன் மீது பொய்யான குற்றசாட்டு வைக்கப்பட்டுள்ளது இது என பெருத்த அவமானம் இதனால் நான் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொள்ள போகிறேன் என கூறியுள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரை சமாதான படுத்த முயன்றுள்ளனர். அப்போது அங்கு பொதுமக்களும் கூட்டமாக கூடினர். திடீரென அவர் யாரும் எதிர்பார்க்காத வகையில் தான் கையில் வைத்து இருந்த துப்பாக்கியால் தனது மார்பில் சுட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். பொதுமக்கள் மற்றும் போலீஸ் கண் எதிரில் நடந்தது. இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.
பின்னர் அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து அவரது மகன் அஜய்-யிடம் விசாரணை நடத்தியதில் எனது மனைவிக்கும் ஏற்பட்ட சண்டை காரணமாக அவர் எனது தந்தை மீது அபாண்டமாக பொய் குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார். பணத்தை பறிக்க அவர் மீது தனது மனைவி வீண் பழி சுமத்தி விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் மருமகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் எது உண்மையென விசாரணை முடிவில் தான் தெரியவரும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…