Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விஐபிக்களின் பாதுகாப்பு வாபஸ்:- பஞ்சாப் அரசு அதிரடி..!

Bala May 28, 2022 & 12:47 [IST]
விஐபிக்களின் பாதுகாப்பு  வாபஸ்:- பஞ்சாப் அரசு அதிரடி..!Representative Image.

பஞ்சாப் மாநிலத்தில் 424 பேருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை அம்மாநில அரசு திரும்ப பெற்றது.

பாஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்ததில் இருந்து பல்வேறு அதிரடி மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் ஒய்வு பெற்ற அதிகாரிகள், மத தலைவர்கள் உள்ளிட்ட 424 பேருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை அம்மாநில அரசு வாபஸ் பெற்றுள்ளது. மேலும் சம்மந்தப்பட்ட காவல் அதிகாரிகள், இன்று ஜலந்தர் கான்ட் பகுதியில் உள்ள சிறப்பு டிஜிபி மாநில ஆயுதப்படை காவல்துறையினரிடம் அறிக்கை அளிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே, முன்னாள் முதல்வர் சரண்ஜித் சன்னி, கேப்டன் அம்ரிந்தர் சிங்கின் மகன், மற்ரும் அவரது மனைவியும் காங்கிரஸ் எம்.எல்.ஏவுமான பர்தாப் சிங் ஆகியோருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பையும் கடந்த மாதம் திரும்ப பெற்றது குறிப்பிடத்தக்கது.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்