Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சுதந்திர தின விழா கோலாகலம்... டெல்லியில் வெடிபொருட்கள் பறிமுதல்...!

Muthu Kumar August 12, 2022 & 17:45 [IST]
சுதந்திர தின விழா கோலாகலம்... டெல்லியில் வெடிபொருட்கள் பறிமுதல்...!Representative Image.

இந்தியாவின் 75 வது சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்பம் நிலையில் இந்தியாவில் அணைவரும் தங்களும் வீடுகளில் தேசிய கொடி ஏற்றும்படியும், தங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் தேசிய கொடி வைக்க வேண்டும்  என  பிரதமர் மோடி கோரிக்கை வைத்தார்.

இந்நிலையில், சுதந்திர தினவிழா  நடைபெறும் செங்கோட்டை பகுதியில் 10,000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

இதனையடுத்து, சுதந்திர தினத்தைச் சீர்குலைக்க பயங்கரவாதிகள்  முயற்சிக்கலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால், அப்பகுதியில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லி ஆனந்த் விஹார் என்ற பகுதியில் போலீஸார் நடத்திய சோதனையில், 2000 தோட்டாகள், வெடிமருந்துகள் இருந்த பைகள் கண்டுப்பிடிக்கப்பட்டது. 

மேலும், இது தொடர்பாக 6 பேரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்