Tamilnadu News Live : தமிழகத்தில் பொறியியல், கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான மாநில பாடத்திட்ட பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது. இந்நிலையில், பொறியியல் படிப்புகள், கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கை பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு விண்ணப்பிக்கும் தேதி நேற்றுடன் முடிந்துவிட்டது. மேலும், பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 17 என அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, தமிழகத்தில் தற்போது வரை சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இதனால் சிபிஎஸ்சி மாணவர்களின் மேற் பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனை தவிர்க்க பொறியியல் பட்டப்படிப்புகள் மற்றும் கலை, அறிவியல் பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்குன் தேதி நீட்டிக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
அதன்படி, சிபிஎஸ்சி மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியான அடுத்த 5 நாட்கள் வரை பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…