இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 44,203,754 என அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 526,826 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 43,535,610 என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இதனையடுத்து, இந்தியாவில் டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் டெல்லியில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதன்படி, விதிகளை மீறுபவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரித்துள்ளார்.
மேலும், டில்லியில் உள்ள சுப்ரீம் கோர்ட்டில் உள்ள வாக்கறிஞர்கள் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்பதை தலைமை நீதிபதி என் வி ரமணா கட்டாயமாக்கியுள்ளார்
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…