Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

தமிழறிஞர் மறைவு...முதல்வர் நேரில் சென்று...இரங்கல்!

Priyanka Hochumin Updated:
தமிழறிஞர் மறைவு...முதல்வர் நேரில் சென்று...இரங்கல்! Representative Image.

தமிழறிஞர் அவ்வை நடராஜன் உடலுக்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.

இவர் மறைந்த தமிழக முதல்வர் கலைஞர் உடன் நெருங்கிய நட்பு பாராட்டியவர். 87 வயதான இவர் வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார். இவரின் மறைவுக்கு தமிழகத்தின் பிரபலங்கள், தமிழறிஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று அண்னாநகரில் உள்ள அவ்வை நடராஜன் இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது அங்கு  ஜெகத்ரட்சகன், கவிஞர் வைரமுத்து ஆகியோர் இருந்ததாக கூறப்படுகிறது. இவரின் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட பதிவில், "சிறந்த தமிழறிஞர் அவ்வை நடராசன் (87) அவர்கள், வயது மூப்பின் காரணமாக உயிரிழந்த தகவல் கேட்டதும் மிகவும் வேதனை அடைந்தேன். இவர் ‘உரைவேந்தர்’ அவ்வை துரைசாமி அவர்களின் மகனாகப் பிறந்து, தந்தையைப் போலவே தமிழிலக்கியத்தில் நாட்டம் கொண்டு கல்லூரிகளில் தமிழைப் கற்பித்து வந்தார்.

இவரின் தமிழ் பணிக்காக பத்மஸ்ரீ, கலைமாமணி முதலிய ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். தமிழில் எண்ணற்ற நூல்களையும், அவர் கற்பித்து நூற்றுக்கும் மேலான மாணாக்கர்களையும்  நம்மிடம் விட்டுச்சென்றுள்ளார். இவரின் இறப்பு தமிழ்த்துறையினர்க்கும், கல்விப் புலத்தார்க்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், தமிழறிஞர் பெருமக்கள் மற்றும் மாணவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்