தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகின் சினிமா பிரபலங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக இருக்கும் ஃபேஷன் டிசைனர் பிரதியுஷா கரிமேலா என்பவர் மர்மமான முறையில் அவரது வீட்டில் இறந்து கிடந்த சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலை குறித்து போலீசார் கூறுகையில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என நினைக்கிறோம், பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் இருக்கும் அவர் வீட்டின் குளியல் அறையில் இறந்து கிடந்தார். மேலும் அவரது வீட்டில் உள்ள ஒரு அறையில் கார்பன் மோனாக்சைடு சிலிண்டர் இருந்தது தெரியவந்துள்ளது. அவரது உடலை கைப்பற்றியுள்ள நிலையில் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே இது கொலையா அல்லது தற்கொலையா என கூற முடியும் என தெரிவித்துள்ள போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…