நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள நானே வருவேன் படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகும் என தனுஷ் ட்விட்டரில் அறிவித்துள்ளார்.
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் ஹீரோவாக நடிக்கும் படம் நானே வருவேன். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்நிலையில், படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட்டை வெளியிட்ட தனுஷ், இந்த மாதத்தில் படம் வெளியாக இருப்பதையும் உறுதி செய்தார்.
மேலும் படத்தில் தனுஷ் இரண்டு வேடங்களில் நடிப்பதாக தயாரிப்பாளர் தாணு கூறியிருந்த நிலையில், தனது டிவிட்டர் பதிவில், "ஒரே ஒரு ஊருக்குள்ளே, இரண்டு ராஜா இருந்தாராம்.. ஒரு ராஜா நல்லவராம், இன்னொரு ராஜா கெட்டவராம்" என பாடல் வெளியீடு குறித்த அறிவிப்புடன் தனுஷ் குறிப்பிட்டுள்ளது எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…