Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ராமேசுவரத்தில் பெண் எரித்து கொலை...6வடமாநில இளைஞர்கள் கைது...கூடுபாலியல் வன்கொடுமை நடந்ததா? போலீசார் விசாரணை.!

madhankumar May 25, 2022 & 20:03 [IST]
ராமேசுவரத்தில் பெண் எரித்து கொலை...6வடமாநில இளைஞர்கள் கைது...கூடுபாலியல் வன்கொடுமை நடந்ததா? போலீசார் விசாரணை.!Representative Image.

ராமேசுவரம் அருகே மீனவ கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்டுள்ளார். கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், இது தொடர்பாக வடமாநில இளைஞர்கள் சிலரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, மீனவ கிராம மக்களின் போராட்டத்தால் பெரும் பதற்றம் நிலவியது.

ராமேசுவரம் அருகே வடகாடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த 45 வயது பெண் ஒருவர் வடகாடு கடலோர பகுதிகளில் கடல் பாசிகள் சேகரிக்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் கடல்பாசி சேகரிக்க சென்ற அவர் வீடுதிரும்பவில்லை. இதனால் அவரது உறவினர்கள் கடலோரப்பகுதிகளில் அவரை தேடிபார்த்தனர்.

இரவு ஆனா பின்னரும் அவர் வீடுதிரும்பாததால் அவரது கணவர் போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து அவரை தேடிவந்த போலீசார் செவ்வாய்கிழமை இரவு வடகாடு காட்டு பகுதியில், பாதியளவிலான ஆடையுடன் முகம் எரிந்து உயிரிழந்த நிலையில் அவரது உடலை போலீஸார் கண்டெடுத்தனர்.

பின்னர் போலீசார் அவருடன் கடல்பாசி சேகரிக்கும் பெண்களிடம் விசாரித்ததில் அருகில் உள்ள இறால் பண்ணையில் வேலை செய்யும் வடமாநில இளைஞர்கள் அவரிடம் கிண்டல் செய்ததால் அவர்களுடன் தகராறில் ஈடுபட்டார் என தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் இறால்பண்ணையை தீயிட்டு கொளுத்தினர், பின்னர் அந்த 6 வடமாநில இளைஞர்களை அடித்து உதைத்தனர், போலீசார் அவர்களை பாதுகாக்க ஒரு அறையில் வைத்து பூட்டினர்.

பின்னர் பெண்ணின் உறவினர்கள் கொலைக்கு காரணமானவர்களை கைது செய்த பின்னர்தான் உடலை பிரேதபரிசோதனை செய்யவேண்டும் என கூறி 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் சாலையில் டயர்களை கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு 5.30 மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் சம்பந்தப்பட்டவர்களின் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க ஏற்பாடு செய்யப்படும் நிவாரணம் வழங்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து அங்கிருந்து களைந்து சென்றனர்.

இதனையடுத்து பிரேதபரிசோதனைக்கு பிறகே பெண் கூடுபாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா என்பது தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்