மாண்டஸ் புயல் காரணமாக கடந்த ஐந்து நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்த விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் இன்று அதிகாலை முதல் கடலுக்கு மீன் பிடிக்க உற்சாக
சென்றனர்.
மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களாக தூத்துக்குடி ,வேம்பார், புன்ன காயல், தருவைகுளம், ,ஆலந்தலை , பெரியதாழை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் 3000க்கும் மேற்பட்ட நாட்டுப் படகு மற்றும் பைபர் படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் புயல் எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டதை தொடர்ந்து இன்று அதிகாலை ஐந்து மணி முதல் தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து நூற்றுக்கணக்கான விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு உற்சாகமாக சென்றனர்.
இதே போன்று மாவட்ட முழுவதும் இன்று நாட்டுப்படகு மற்றும் பைபர் படகு மீனவர்களும் அதிகாலை முதல் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…