மீன்களின் இனப்பெருக்கத்திற்காக அறிவிக்கப்பட்டிருந்த 60 நாள் மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைந்தும், வரும் 18ம் தேதி வரை கடலுக்குச் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளதால் தூத்துக்குடி மீனவர்கள் கவலையடைந்துள்ளனர்.
தமிழக கடலோர மாவட்டங்களுக்கான 60 மீன்பிடித் தடை காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல இருந்தனர். இந்த நிலையில், மன்னர் வளைகுடா மற்றும் தென் கடலோரப் பகுதிகளில் 55 கிலோ மீட்டர் முதல் 65 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசு கூடும் என்பதால் வருகிற 18-ஆம் தேதி வரை விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவிப்பு வெளியிட்டது.
இதனால், 60 நாட்களுக்கு பின்பு கடலுக்கு செல்ல தயாராக இருந்த விசைப்படகு மீனவர்கள் தங்கள் படகுகளை கரையில் நிறுத்தி வைத்து, ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். கடலுக்கு செல்ல தயாராக இருந்த நிலையில், மேலும் நான்கு நாட்களுக்கு கடலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என விசைப்படகு மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…