பாகிஸ்தான் வாஸிராபாத்தில் பேரணியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் முன்னாள் பிரதமரான இம்ரான் கானிற்கு காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
பாகிஸ்தானின் வாஸிராமாபத்தில், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான்கான் பேரணி ஒன்றை நடத்தினார். இதில், நடந்த துப்பாக்கிச்சூட்டில், அவருக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, கட்சியின் முக்கிய உறுப்பினர்கள், நிர்வாகிகள் போன்றோரும் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. பிறகு, இம்ரான் கான் உட்பட காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு தற்போது பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…