டெல்லி செங்கோட்டை தாக்குதல் வழக்கில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ராணுவ வீரர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்த 2000 செங்கோட்டை தாக்குதல் வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி முகமது ஆரிஃப் என்ற ஆஷ்பக் மனு தாக்கல் செய்திருந்தார்.
தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித் மற்றும் நீதிபதி பேலா எம் திரிவேதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது குற்றம் முழுமையாக நிரூபிக்கப்பட்டுள்ளதால் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்படுவதாக் கூறி உத்தரவிட்டுள்ளது.
டிசம்பர் 22, 2000 அன்று செங்கோட்டைக்குள் நுழைந்து நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் தண்டனை பெற்றவர்களில் ஆரிஃப்பும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…