பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் இன்று பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். மேலும் தனது கட்சியான பஞ்சாப் லோக் காங்கிரஸை பாஜகவுடன் இணைத்தார்.
பஞ்சாப் சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன் காங்கிரஸுடனான உறவை முறித்துக் கொண்ட அமரீந்தர் சிங், பாஜகவுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட்டார். எனினும் அவரால் வெற்றி பெற முடியவில்லை.
இந்நிலையில் பாஜகவுடன் இணைவது குறித்து அமரீந்தர் சிங் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அமரீந்தர் சிங் கடந்த வாரம் சந்தித்த நிலையில், பஞ்சாப் லோக் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பிரித்பால் சிங் பலியாவால் கடந்த வெள்ளிக்கிழமை கட்சியை இணைத்துக் கொள்வதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
இதற்காக டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில், அமரீந்தர் சிங்குடன் ஏழு முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஒரு முன்னாள் எம்.பி. பாஜகவில் இணைந்தனர். கட்சியின் மற்ற நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சண்டிகரில் நடைபெறும் தனி நிகழ்வில் பாஜகவில் இணைவார்கள் என்று பலியாவால் கூறினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…