Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மாமன்னன் பிளாப் திரைப்படம்: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Baskarans Updated:
மாமன்னன் பிளாப் திரைப்படம்: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் Representative Image.

சென்னை: அமைச்சர் பதவி என்பது ஒரு கேடயம் அது செந்தில் பாலாஜியை சுற்றி இருந்தால் அமலாக்கத்துறை செலுத்தும் வாளை அது தடுக்கும் என்றும் கேடயத்தை பயன்படுத்தி அமலாக்க துறையின் வாளை தடுப்பதுதான் மாநில அரசின் உச்சபட்ச எண்ணமாக இருக்கிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் ஸ்டைக்கர்ஸ் என்கிற கால்பந்து கிளப்பின் லோகோ வெளியீட்டு விழாவில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு லோகோவை வெளியிட்டார்.  அப்போது பேசிய ஜெயக்குமார், தமிழ்நாட்டின் விளையாட்டு தலைநகரமாக சென்னை இருக்க வேண்டும் என ஆசிய விளையாட்டு போட்டிகளை சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் சென்னையில் நடத்தினார்கள்..அப்போ வளர்ந்தது தான் சென்னை.

பல விளையாட்டு மைதானங்களை உருவாக்கி அதன் மூலம் தமிழ்நாடு விளையாட்டில் முதன்மையான மாநிலம் என முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உருவாக்கினார்.நேரு மைதானம் 6 மாதத்தில் 18 கோடி ரூபாய் செலவில் கட்டிமுடிக்கப்பட்டது.

முதலமைச்சர் முக ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக இருக்கும் போது அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து பேசியது சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது... செந்தில் பாலாஜி மிகப்பெரிய ஊழல்வாதி நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அவர் மீது நடவடிக்கை எடுப்போம் என்று அன்று கூறினார்...

அமலாக்கத்துறை கைது செய்து கைதி என் கொடுக்கப்பட்ட நபர் எவ்வாறு அமைச்சராக தொடர முடியும்...அது தான் எங்கள் கேள்வி? அதுனால தான் நாங்கள் ஆளுநரிடம் மனு அளித்தோம். எங்கள் ஆட்சி காலத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அமைச்சரவையில் இருந்து நீக்கினார். இது போன்று நீக்குங்கள் என ஆளுநரிடம் உதாரணங்களை நாங்கள் கூறினோம். இலாகா கவனிக்க தான் ஒரு அமைச்சர். இலாகா இல்லாத அமைச்சருக்கு எதற்க்கு மக்களின் வரி பணம் என்பது தான் எங்கள் கேள்வி

 மாநிலத்தின் ஒத்துழைப்பு இல்லாத காரணத்தினால் அமைச்சராக இருக்கும் நிலையில் விசாரணைக்கு எவ்வாறு ஒத்துழைப்பார்?ஒத்துழைக்க மாட்டார்கள்.அமைச்சராக இருந்தால் விசாரணைக்கு குந்தகம் விளைவிக்கும் பல உண்மைகள் வெளி வராமல் சென்று விடும். சமயோகித புத்தியில் ஆளுநர் செந்தில்பாஜியை நீக்கி உள்ளார்.அதன் பின் அட்டர்னி ஜெனரல் இடம் கலந்து ஆலோசிப்பதாக தெரிவித்துள்ளார்.இது குறித்த கேள்வியை ஆளுநரிடம் தான் கேட்க வேண்டும்.

அமைச்சர் என்பது ஒரு கேடயம்...அது செந்தில் பாலாஜியை சுற்றி இருந்தால் ED செலுத்தும் வாளை அந்த கேடயம் தடுக்கும் கைதி எண் கொடுத்த பிறகு எவ்வாறு ஒருவர் அமைச்சராக நீடிக்க முடியும்.அமைச்சராக நீடிப்பதற்கு செந்தில் பாலாஜிக்கு எந்தவித தகுதியும் இல்லை.

அமைச்சர் என்கிற கேடயத்தின் மூலம் அமலாக்கத் துறையின் வாளை தடுப்பது‌ தான் மாநில அரசின் உச்ச பச்ச எண்ணமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது படமெல்லாம் நான் பார்ப்பது கிடையாது. மாமன்னன் சுத்த ஃப்ளாப் படம் தான். திமுகவினர் தான் அந்த படத்தை சென்று பார்க்கிறார்கள். சமூக நீதிக்கு கொஞ்சம் கூட தகுதி திமுகவிற்கு இருக்கிறதா? அதிமுக தான் தலித்களுக்கு கட்சியிலும் ஆட்சியிலும் முக்கியத்துவம் கொடுத்த கட்சி. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான் சமூக நீதியை நிலை நாட்டியவர்.

தனபால் சபாநாயகராக இருக்கும் போது திமுகவினர் அசிங்க படுத்தி ,அவமான படுத்தி சமூக நீதியை குழி தோண்டி புதைத்தனர். சமூக நீதிக்கும் திமுகவிற்கும் சம்பந்தம் கிடையாது. அருந்ததி சமூதாயத்தினரை திமுகவினர் தற்பொழுது சபாநாயகராக அமர வைப்பார்களா?தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சரின் செயல்பாடு கேவலமாக உள்ளது என்றார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்