தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே ரூ.3.10 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் கனிமொழி எம்பி, அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எத்திரப்ப நாயக்கன்பட்டி, தலை காட்டுப்புரம், நீராவி புதுப்பட்டி ராமன் ஊத்து உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் களம் முகாம் நடைபெற்றது.
இம் முகாமில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி , சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி மார்க்கண்டேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இம் மக்கள் களம் முகாமில் எத்திலப் நாயக்கன் பட்டி கிராமத்தில் 40 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாய நல கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவும், நீராவி புதுப்பட்டி பருவக்குடி சாலை 198.லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய தார் சாலை,ராமனூத்து பருவக்குடி சாலை 78 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அமைப்பதற்கும் பணியை துவக்கி கொடியசைத்து துவக்கி வைத்து மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…