மாநகர போக்குவரத்து கழக மேலாளர் அன்பு ஆபிரகாம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் சென்னை மாநகரில் 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டை வழங்கப்பட்டு வருகிறது. 2022 ஜூன் மாதம் வரை பயணம் செய்யும் வகையில், மூத்த குடிமக்களுக்கு பயண அட்டை மற்றும் டோக்கன்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.
அடுத்த அரையாண்டிற்கு, ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம், 6 மாதங்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் மற்றும் பயண அட்டைகள் 40 மையங்களில், வருகிற 21-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் அடுத்த மாதம் (ஜூலை) 31-ந்தேதி வரை காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர், 1.8.2022 முதல் அந்தந்த பணிமனைகளின் அலுவலகத்தில், அலுவலக நேரத்தில் வழங்கப்படும். சென்னை வாழ் மூத்த குடிமக்கள் இந்த பேருந்து பயண அட்டை மற்றும் டோக்கன்களை வாங்குவதற்கு இருப்பிட சான்றாக குடும்ப அட்டையின் நகலுடன், வயது சான்றாக ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், கல்வி சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டையின் நகல், 2 வண்ண பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங் களை சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் சம்மந்தப்பட்ட ஆவணங்களை சரிபார்க்க மகளுடன் அசலையும் கொண்டுவர வேண்டும் எனவும், புதுப்பிக்க வருபவர்கள் பழைய அட்டையை மட்டும் கொண்டுவந்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…