முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் ஏழு தமிழர்கள் அடைக்கப்பட்டனர்,
இந்நிலையில், இவர்களில் ஒருவரான நளினி ஏற்கனவே சில மாதங்களால பரோலில் இருந்து வருகிறார். இந்நிலையில், தற்போது அவரது பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நளினிக்கு முதல் முறையாக பரோல் வழங்கப்பட்டதை அடுத்து அவருக்கு ஒவ்வொரு மாதமும் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தற்போது 8-வது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், நளினியின் தாயார் பத்மாவதி உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை கவனித்துக் கொள்ள பரோலை நீட்டிக்க வேண்டும் என நளினியின் வேண்டுகோள் வைத்த நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…