Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஒன்றல்ல...இரண்டல்ல 15 திருமணங்கள்!!....சிக்குவாரா திருமண திருடி சீமா?

madhankumar May 28, 2022 & 17:13 [IST]
ஒன்றல்ல...இரண்டல்ல 15 திருமணங்கள்!!....சிக்குவாரா திருமண திருடி சீமா?Representative Image.

திருமணம் செய்வதையே தொழிலாக கொண்டிருக்கும் சீமா என்ற பெண் தனது 15வது திருமணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு தப்பியோடியுள்ளார்.

மத்தியபிரதேச மாநிலம் போபாலை சேர்ந்தவர் காந்தா பிரசாத், இவருக்கு நீண்ட காலமாக திருமணம் ஆகவில்லை. இதனால் தனது உறவினர்கள், நண்பர்கள், ஆகியோரிடம் தனக்கு நல்ல பெண் ஒன்றை பார்க்குமாறு கூறியுள்ளார். இதனையடுத்து அவருக்கு பழக்கமான தினேஷ் என்ற நபர் தனக்கு தெரிந்த பெண் ஒருவர் இருக்கிறார், அவர் பெயர் பூஜா என கூறிஉள்ளலர்.

இதனையடுத்து பிரசாத் பூஜாவை பெண்பார்க்க சென்றுள்ளார். அப்போது நீண்ட நாட்களாக திருமணம் ஆகாததால் இதனை விட்டால் தனக்கு திருமணம் ஆகாது என நிலைத்த அவர் எனக்கு முழு சம்மதம் என தெரிவித்துளளார். பூஜாவும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். பின்னர் பிரசாத் திருமண ஏற்பாடுகளை செய்துள்ளார். பின்னர் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது, மணமக்களை உறவினர்கள் அனைவரும் திரண்டு வந்து வாழ்த்தினர்.

திருமணம் முடிந்த கையேடு முதலிரவையும் முடித்த பூஜா தப்பியோட நல்ல நேரம் பார்த்து காத்துக்கொண்டிருந்துள்ளார். 8 நாட்கள் கழித்து அப்போது தினேஷின் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என கூறி போன் வந்துள்ளது, சரி சென்றுவா என கூறி தினேஷின் வீட்டிற்கு பூஜாவை அனுப்பிவைத்துளார் பிரஷாத் சென்றவர் வரவே இல்லை.


சரி உடல்நிலை சரியில்லை அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கலாம் என நினைத்து தினேஷுக்கு போன் செய்துள்ளார் பிரசாத், ஆனால் தினேஷ் போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்துள்ளது. பின்னர் வீட்டிற்கு சென்று பீரோவை திறந்து பார்த்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது, அதில் வைக்கப்பட்டிருந்த பணம் நகை அனைத்தையும் காணவில்லை. சந்தேகமடைந்த பிரஷாத் போலீசில் புகார் அளித்துள்ளார். 

இது குறித்து போலீசார் கூறும்போது:

நீங்கள் திருமணம் செய்து கொண்ட பெண்ணின் பெயர் பூஜா அல்ல அவரின் உண்மையான பெயர் சீமா...மேலும் இது அவருக்கு முதல் திருமணம் அல்ல அதற்காக இரண்டாவது மூன்றாவது என நினைக்காதீர்கள் ஏனென்றால் இது சீமாவிற்கு 15வது திருமணமாகும் என போலீசார் கூறியதை கேட்ட பிரஷாத் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுள்ளார்.

இதனையடுத்து பேசிய போலீசார் இந்த சீமா என்ற பெண் 15 பேரை கல்யாணம் செய்து, 15 பேரிடமும் நகை, பணத்தை கொள்ளையடித்து ஓடிவந்துள்ளார் அந்த பெண். ரியா, ரெனி, சுல்லானா என்று ஒவ்வொரு கணவனிடம் ஒவ்வொரு பெயர்களுடன் நடமாடி உள்ளார். மேலும் திருமணமாகில் கணவர் அசந்த நேரம் பார்த்து எஸ்கேப் ஆகிவிடுவது இவரின் வழக்கம், ஆனால் பிரஷாத் வீட்டில் இருந்து வெளியேற சரியான சந்தர்ப்பம் பார்த்து காத்துக்கொண்டிருந்துள்ளார். அது கிடைக்காத நிலையில் இப்படி ஒரு நாடகத்தை நிகழ்த்தி தப்பிச்சென்றுள்ளார் என கூறியுள்ளனர்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சைபர் கிரைம் போலீசார் இந்த கும்பலில் எத்தனை பேர் உள்ளனர் என்று விசாரணை மேற்கொண்டனர். லூட்டரி துல்ஹான் என்ற கும்பலில் 15 க்கும் மேற்பட்டவ்ர்கள் இருப்பது தெரியவந்தது. இதில் 3 பெண்கள் உள்ப்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர். 8 பேர் தலைமறைவாக உள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்