ரஷ்யாவின் கடும் எச்சரிக்கையை அடுத்த தனது ராணுவத்தை நவீனப்படுத்த ரூ.8 லட்சம் கோடியை ஜெர்மனி ஒதுக்கியுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு 3 மாதங்களாக நீடித்து வரும் நிலையில், உக்ரைனுக்கு உதவும் விதமாக மேற்கத்திய நாடுகள் ஆயுதங்களை வழங்கி போரை ஊக்குவித்து வருகின்றன. இது குறித்து பிரான்ஸ் அதிபர் மேக்ரோன், ஜெர்மனி பிரதமர் ஓலர் ஷோல்ஸ் ஆகியோருடன் தொலைபேசியில் பேசிய ரஷ்ய அதிபர் புதின், உக்ரைனுக்கு ஆயுதங்களை விநியோகிப்பதை நிறுத்த வேண்டும் என்றும், இல்லையென்றால் மேற்கத்திய நாடுகளின் நிலைமை சீர்குலையும் என கடுமையாக எச்சரித்துள்ளார்.
இந்நிலையில் ரஷ்யாவால் அச்சுறுத்தல் ஏற்பட்டால், அதை எதிர்கொள்ளும் வகையில் தனது நாட்டு ராணுவத்தை நவீனப்படுத்துவதற்கு ரூ.8 லட்சம் கோடியை ஜெர்மனி ஒதுக்கியுள்ளது. ஜெர்மனியில் கேஸ், உணவுப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் கடும் அவதியடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…