நெப்தாலி பென்னட் தலைமையிலான இஸ்ரேலின் பலவீனமான கூட்டணி அரசாங்கம் பாராளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தலுக்கு அழைப்பு விடுக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இஸ்ரேல் மூன்று ஆண்டுகளில் நாட்டின் ஐந்தாவது தேர்தலை எதிர்கொள்ள உள்ளது.
இந்த தேர்தல், முன்னாள் பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான ஒரு தேசியவாத மத அரசாங்கத்தை மீண்டும் கொண்டு வரலாம் அல்லது மற்றொரு நீண்ட கால அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தலாம்.
முந்தைய நான்கு தேர்தல்கள், ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக விசாரணையில் இருந்தபோது, நெதன்யாகு ஆட்சி செய்வதற்கான தகுதியை மையமாகக் கொண்டு தொடர் சிக்கலை எதிர்கொண்டு நெதன்யாகுவின் பதவிக்கு வேட்டு வைத்தது குறிப்பிடத்தக்கது.
பென்னட் கடந்த ஜூன் 2021 இல் தான் எட்டு கட்சிக் கூட்டணியை உருவாக்கி முதல் முறையாக பிரதமர் ஆகியிருந்தார்.
இது 1967ல் கைப்பற்றப்பட்ட நிலங்களை இஸ்ரேல் ஆக்கிரமித்ததை முடிவுக்குக் கொண்டு வருவதை ஆதரிக்கும் மோசமான பிரிவுகள் முதல் பாலஸ்தீனிய சுதந்திரத்தை எதிர்க்கும் கடுமையான கட்சிகள் வரை பலதரப்பட்ட கட்சிகளை உள்ளடக்கியது. மேலும் அரபுக் கட்சியை உள்ளடக்கிய முதல் இஸ்ரேலிய கூட்டணி அரசாங்கம் என்ற வரலாற்றையும் இது உருவாக்கியிருந்தது.
ஆனால் ஒரே வருடத்தில் அது அவிழ்ந்தது. பென்னட்டின் தீவிர வலதுசாரி கட்சியைச் சேர்ந்த பலர் கூட்டணியை தக்க வைக்க அவர் செய்த சமரசங்கள் மற்றும் அவரது மிதமான தன்மையை தொடர்ந்து எதிர்த்து வந்தது தான் இது முதல் காரணம்.
பென்னட்டின் இந்த முடிவுக்கு உடனடி காரணம், மேற்குக் கரையில் குடியேறியவர்களுக்கு சிறப்பு சட்ட அந்தஸ்து வழங்கும் சட்டங்களின் காலாவதியாகும். அந்தச் சட்டங்கள் காலாவதியாகி விட்டால், குடியேற்றவாசிகள், 2 மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனியர்களுக்குப் பொருந்தும் பல இராணுவச் சட்டங்களுக்கு உட்பட்டு இருப்பார்கள்.
இந்த மாத தொடக்கத்தில் சட்டங்களை நீட்டிக்க பாராளுமன்றம் வாக்களிக்க இருந்தது. ஆனால் குடியேற்ற ஆதரவாளர்களை உள்ளடக்கிய கடும்போக்கு எதிர்ப்பு, அரசாங்கத்தை சங்கடப்படுத்தும் வகையில் முரண்பாடாக மசோதாவுக்கு எதிராக வாக்களித்தது.
இதனால் பாராளுமன்றத்தை கலைப்பதன் மூலம் மட்டுமே அந்த சட்டங்களை நடைமுறையில் வைத்திருக்க முடியும் எனும் சூழல் உருவானது. பென்னட்டும் ஒரு முன்னாள் குடியேறிய தலைவர், அவர் சட்டங்கள் காலாவதியாகிவிட அனுமதித்திருந்தால், கடுமையான பாதுகாப்பு அபாயங்கள் மற்றும் அரசியலமைப்பு குழப்பம் இருந்திருக்கும் என்றும் அதை தன்னால் ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று கூறினார்.
அடுத்த மாதம் திட்டமிடப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனின் வருகைக்கு மத்தியில் திடீரென நடந்த இந்த ஆட்சி கலைப்பு அமெரிக்க அதிபரின் பயணத்திலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ஜோ பிடென் பயணம் திட்டமிட்டபடி நடைபெறும் என கருதுவதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே நெப்தாலி பென்னட்டின் ஆட்சிக் கலைப்பு முடிவை வரவேற்றுள்ள முன்னாள் பிரதமர் நெதன்யாகு, தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் முனைப்புடன் உள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…