உக்ரைனில் உக்கிரமாக நடைபெறும் போருக்கு மத்தியில் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாக சோதித்துள்ளது.
சுமார் 1,000 கிமீ தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஜிர்கான் க்ரூஸ் ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாகச் சோதனை செய்தது என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பேரண்ட்ஸ் கடலில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை வெள்ளைக் கடலில் உள்ள இலக்கைத் தாக்கியது என தெரிவித்துள்ள அதிகாரிகள் அது தொடர்பான வீடியோவையும் பகிர்ந்துள்ளனர்.
ஹைப்பர்சோனிக் ஆயுதங்கள் ஒலியை விட ஒன்பது மடங்கு வேகத்தில் பயணிக்க முடியும், மேலும் ரஷ்யா கடந்த ஆண்டில் போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து ஜிர்கானின் சோதனை ஏவுதலை நடத்தியது.
3 மாதங்களுக்கு மேலாக உக்ரைனில் நடைபெறும் உக்கிர போரால் ரஷ்யா தனது பலத்தையும், வீரர்களையும் இழந்துள்ளதாக மேற்கத்திய நாடுகள் கூறிவந்தன. இந்நிலையில் அந்த பிம்பத்தை உடைக்கும் வகையிலும், ஏவுகணை தொழில்நுட்பத்தில் அதன் வலிமையை உலகிற்கு நினைவூட்டுவதற்காக அதிநவீன ஆயுத சோதனைகயை ரஷ்யா நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…