Tamilnadu News Live : உலகம் முழுவதும் கடந்த 2019ம் ஆண்டு முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்தது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைவரும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து 80%க்கும் மேல் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி விட்டனர்.
இந்நிலையில், தற்போது தமிழகத்தில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக அதிகரித்துள்ளது. அதன்படி, நேற்றைய பாதிப்பு 500ஐ நெருங்கிவிட்டதால் பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும், காய்ச்சல் சளி உள்ளிட்ட எந்த அறிகுறி இருந்தாலும் உடனே மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும், கொரோனா தொற்றில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள பூஸ்டர் தடுப்பு ஊசி மட்டுமே சரியான ஆயுதம் எனவும் தெரிவித்துள்ளார்
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…